தயாநிதி மாறன் வெற்றிக்காக வீதி வீதியாக சென்று ஸ்டாலின் நன்றி
சென்னை: மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றதற்காக, தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து வீதி வீதியாக போய் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
மத்திய சென்னை தொகுதியில் 2வது முறையாக வென்று மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளார் தயாநிதி மாறன்.
இதையடுத்து தொகுதி முழுவதும் சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார் தயாநிதி மாறன். நேற்று ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திறந்த ஜீப்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நின்று கொண்டு வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அவர்களுடன் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவும் உடன் சென்றார்.
வழியெங்கும் பெரும் திரளானோர் திரண்டு வந்த ஸ்டாலினை வரவேற்றனர். பூரண கும்ப மரியாதைகளும் செய்யப்பட்டன.