ஆஸ்திரேலியரை அடித்து, உதைத்த இந்திய மாணவர்கள்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலியர்கள் இந்தியர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட தாக்குதலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜனின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பல மாணவர்களுக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.
இந் நிலையில் இந்தியர்களை தகாத வார்த்தைகளை பிரயோகப்படுத்தி பேசிய ஆஸ்திரேலியர் ஒருவரை இந்திய மாணவர்கள் அடித்து உதைத்துள்ளனர். தங்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது இருந்த ஓட்டுமொத்த கோபத்தையும் அவரிடம் காட்டியுள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க அந்த ஆஸ்திரேலிய இளைஞர், நீங்கள் கறுப்பர்கள்... அதனால், இங்கே இருக்கக் கூடாது. நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய மாணவர்களை திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து விக்டோரியா பகுதி அமைப்புக்குழு தலைவர் அப்ரா என்பவர் கூறுகையில், இந்திய மாணவர்கள் சட்டத்தை கையில் எடுத்திருப்பதை அனுமதிக்க கூடாது என்றார்.
மேலும் அங்குள்ள இந்து அமைப்புகளும் ஆஸ்திரேலியர் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளன.
இந் நிலையில் இந்திய மாணவர்கள் குழுக் குழுவாக சேர்ந்து ரோந்து சுற்றுவதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இனவெறித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய மாணவர்கள் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.