ஒபாமாவுக்கு கொலை மிரட்டல்-1 ஆண்டு 1 நாள் சிறை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு ஆண்டு மற்றும் ஒரு நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்தாண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வடகரோலினா மாகாணத்தை சேர்ந்த 48 வயதான ஜெரி மைக்கேல் பிளான்சார்டு என்பவர் ஒபாமாவுக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து அமெரிக்க போலீசார் அவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கைது செய்து, வழக்கு பதிந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஒரு ஆண்டு மற்றும் ஒரு நாள் சிறை தண்டனை வழங்கியுள்ளார்.
தீர்ப்பில், ஜெரி மைக்கேலுக்கு ரூ. 1.4 லட்சம் அபராதமும், 1 ஆண்டு, 1 நாள் சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நிற்கவில்லை தீர்ப்பு, விடுதலையாகி 3 ஆண்டுகள் வரை ஜெர்ரி கண்காணிக்கப்படுவார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.