For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான்
தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத் தகவலை வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி முகமது ஜமாலுதீன் தெரிவித்தார்.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து அப்துல்ரஹ்மான் வாழ்த்துப் பெற்றார். உடன் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், வக்பு வாரிய உறுப்பினர் செயலாளர் அலாவுதீன், காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் மற்றும் உறுப்பினர்கள் சென்றனர்.
Comments
Story first published: Thursday, June 11, 2009, 10:24 [IST]