For Daily Alerts
Just In
துப்பாக்கி-சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கர் கைது
சென்னை: சென்னை விமானத்தில் தோட்டா நிரப்பிய ரிவால்வருடன் வந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டார்.
சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக 58 வயதான செமிலார் என்ற அமெரிக்கர் வந்தார். அவருடைய உடமைகளை பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டபோது, அதில் தோட்டாக்கள் நிரப்பிய ரிவால்வர் இருப்பதைப் பார்த்தனர்.
இதையடுத்து விமான நிலைய போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
கடந்த வாரம் டெல்லியிலிருந்து சென்னைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார் செமிலார்.
அவரிடம் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான முறையான உரிமம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது கைது குறித்து அமெரிக்க துணைத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
arrest கைது தமிழ்நாடு chennai சென்னை துப்பாக்கி airport விமான நிலையம் tamilnadu american அமெரிக்கர் தோட்டா revolver
Story first published: Friday, June 12, 2009, 14:26 [IST]