For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபாசமாக பேசிய பாமக செயலாளர் கைது

By Staff
Google Oneindia Tamil News

ஆற்காடு: ஊராட்சி மன்றத் தலைவியைப் பார்த்து ஆபாசமாக பேசியதாக பாமக ஒன்றியச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.

ஆற்காடு அடுத்து உள்ளது வரகூர் ஊராட்சி மன்றம். இதன் தலைவராக இருப்பவர் மலர்க்கொடி. திமுகவை சேர்ந்தவர். இவரது கணவர் பெருமாள்.

மலர்க்கொடிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமிரி மேற்கு ஒன்றிய பாமக செயலாளர் புல்லட் ராதாகிருஷ்ணனுக்கும் (43) இடையே தேர்தல் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மலர்க்கொடி தனது கணவர் பெருமாளுடன் பைக்கில் கருங்காலி குப்பத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, புல்லட் ராதாகிருஷ்ணன் வீடு வழியாக சென்ற போது அவர்களை வழி மறித்த புல்லட் ராதாகிருஷ்ணன், ஆபாசமாக பேசி, மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மலர்க்கொடி திமிரி போலீசில் காவல் நிலையத்தில் செய்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புல்லட் ராதாகிருஷ்ணன் போலீசார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X