விக்டோரியா மாகாண கெளரவ நீதிபதியாக இந்தியர் நியமனம்
விக்டோரியா மாகாணத்தில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் மோதி விசாவின் நியமனம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
65 வயதாகும் மோதி விசா, குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மெல்போர்ன் நகரில் 1983ம் ஆண்டு வந்து செட்டிலானவர். அவர் விக்டோரியா மாகாணத்தின் கெளரவ நீதிபதியாக நியமிக்கப்படுவதாக விக்டோரியா நீதித்துறை தெரிவித்துள்ளது.
விக்டோரியாவின் அமைதி நீதிபதியாக மோதி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பியான்ட் இந்தியா என்ற செய்தித் தாளை நடத்தி வருகிறார் மோதி. இந்திய சமூகத்தவர்களின் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பவும் இவர் தவறுவதில்லை. ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் பிரபலமான இந்திய சமூகத்தவர்களில் இவரும் ஒருவர்.
இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலையும் இவர் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஏற்னவே விக்டோரியா பாராளுமன்றத்தால் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டவர் மோதி.
விக்டோரியா மாகாணத்திற்கு படிக்க வரும் இந்திய மாணவர்களுக்கு பெரும் உதவிகளையும் இவர் செய்து வருகிறார். கார் வசதி இல்லாத மாணவர்களுக்காக அவர்கள் படிக்கும் இடங்களிலிருந்து தங்கியுள்ள இடங்களுக்கு வாகன வசதியையும் செய்து கொடுத்து உதவி செய்து வருகிறார் மோதி என்பது குறிப்பிடத்தக்கது.
கெளரவ நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மோதி, அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.