For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1 லட்சம் தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் குவைத்!

By Staff
Google Oneindia Tamil News

குவைத்: ஏஜென்டுகளை நம்பி முறைகேடாக தங்கள் நாட்டுக்கு வந்துவிட்ட 1 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்புகிறது குவைத் அரசு.

குவைத்தில் மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் பலருக்கு முறையான விசா கிடையாது.

சொந்தமாக நிறுவனம், கடை அல்லது சிறிய அளவில்கூட வர்த்தக நிறுவனம் இல்லாத மோசடிக்காரர்கள் சிலர், பணம் பறிக்க போலியான வேலை அனுமதிக் கடிதத்தைக் கொடுத்து தொழிலாளர்களை ஏமாற்றி குவைத்துக்கு வரவைக்கிறார்கள்.

ஆனால் வந்தபிறகு அவர்களுக்கு சொன்னபடி வேலை தராமல் மிக மோசமாக நடித்துவதும், ஒட்டகப் பராமரிப்பு, ஓட்டல்களில் கிடைத்த வேலையைச் செய்து சரியான வருமானமில்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இப்படி தொழிலாளர்களை வரவழைக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக குவைத் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர் பாதில் சபர் கூறுகையில், முறைகேடான வழியில் குவைத்துக்கு வந்துள்ளவர்களில் 1 லட்சம் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப் போகிறோம்.

மேலும் இப்படி மோசடியாக அவர்களை குவைத்துக்கு வரவழைத்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X