ஜூலை 26ல் 'சைமா' பவள விழா-தயாநிதி பங்கேற்பு
கோவை: ஜூலை 26ல் நடைபெற உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) பவள விழாவில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பங்கேற்கிறார்.
இது குறித்து சைமா தலைவர் துளசிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சர்வதேச பொருளாதார நெருக்கடியில் பல்வேறு இடர்பாடுகளைச் ஜவுளித் துறை சந்தித்து வருகின்றது.
அவற்றில் இருந்து விடுபடுவதற்கும், சவால்களை எதிர்கொள்வதற்கும் புதிய உத்திகளைப் பின்பற்றுவதற்கும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூலை 27ம் தேதி வரை சர்வ தேச ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது .
நவீன ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள், ஜவுளிப் பொருள்களுக்கான போக்குவரத்து வசதிகள், சந்தை வாய்ப்புகள் ஆகியன குறித்து உற்பத்தியாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இக் கண்காட்சியில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத் துறையின் தற்போதைய முன்னேற்றங்கள், புதிய திட்டங்கள், தேவைகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்த அரங்குகள் கண்காட்சியில் இடம் பெறுகின்றது.
நாடு முழுவதும் இருந்து 30,000 பேர் இக் கண்காட்சியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக ஜூலை 26ல் சைமாவின் பவளவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.