For Daily Alerts
Just In
கைதி தப்பி ஓட்டம் - போலீசார் அதிர்ச்சி
தென்காசி: திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு தென்காசி சப் ஜெயிலில்
அடைக்கபட்டிருந்தார்.
இவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று ஆஜர் செய்து விட்டு மீண்டும் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். அப்போது கைதி மாரியப்பன் போலீசார் பிடியில் இருந்து திடீரென தப்பிச் சென்றார்.
இதனால் அதிரிச்சி அடைந்த போலீசார் கைதி மாரியப்பனை தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, June 25, 2009, 16:19 [IST]