For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: முதல்வர் கருணாநிதி தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உள்துறைச் முதன்மைச் செயலாளர் மாலதி, டிஜிபி ஜெயின், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், உளவுத்துறை கூடுதல் டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இவர்கள் தவிர வடக்கு, மேற்கு, தெற்கு, மத்திய மண்டல ஐஜிக்கள், அனைத்து சரக டிஐஜிக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சட்டம் ஒழுங்கு நிலைமை, தீவிரவாத மற்றும் நக்சலைட் ஒழிப்பு நடவடிக்கைகள், கடலோரப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தி்ல் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X