For Daily Alerts
Just In
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக்கைத் தொடங்கினர்
ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர மாக்க வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல் திடீரென ஒப்பந்த்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments
தமிழ்நாடு ஸ்டிரைக் tamilnadu nlc contract workers என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் power production மின் உற்பத்தி
Story first published: Sunday, June 28, 2009, 12:49 [IST]