உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழி தமிழ்-மொய்லி ஆதரவு
அமைச்சரான பின்னர் முதன்முறையாக சென்னை வந்த அவர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, வீரப்ப மொய்லி தான் எழுதிய “ராமாயணம் மகாவேசனம்" என்ற நூலின் தமிழ்ப் பதிப்பு வெளியீட்டு விழா ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வருக்கு அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மொய்லி,
தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து கூற ஆவலுடன் இருந்தேன். அதற்கான நேரம் இப்போது தான் கிடைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்தார். அது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம்.
நீதிபதிகள் குற்றம் செய்தால் தண்டிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது பற்றி சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து வருகிறோம் என்றார்.