For Daily Alerts
Just In
புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய தலைமை வார்டர் சஸ்பெண்ட்
சென்னை: சில நாட்களுக்கு முன்பு புழல் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்று பிடிபட்டு கைதான தலைமை வார்டர் பாலகிருஷ்ணன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த 21ம் தேதியன்று புழல் மத்திய சிறைக்குள் தனது ஷூவுக்குள் மறைத்து கஞ்சா கடத்த முயன்று பிடிபட்டார் பாலகிருஷ்ணன். அவரிடமிருந்து சிகரெட் பாக்கெட்கள், 47 பொட்டலம் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவ செய்யப்பட்டது. இதையடுத்து பொன்னேரி கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் இன்று பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
Comments
தமிழ்நாடு chennai சென்னை புழல் சிறை tamilnadu சஸ்பெண்ட் suspended balakrishnan பாலகிருஷ்ணன் puzhal prison கஞ்சா கடத்தல்
Story first published: Monday, June 29, 2009, 18:51 [IST]