For Daily Alerts
Just In
சென்செக்ஸ்: காலையில் ஏற்றம்-பிற்பகலில் வீழ்ச்சி - முடிவில் உயர்வு
மும்பை: இன்று காலை உயர்வு நிலையில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் பிற்பகலில் வீழ்ச்சி அடைந்து பின்னர் வர்த்தகத்தின் முடிவில் உயர்வுடன் முடிந்தது.
இன்று காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது 155 புள்ளிகள் அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்து காணப்பட்டது. ஆனால் போகப் போக வீழ்ச்சி அடைய ஆரம்பித்து முற்பகலில் 130 புள்ளிகள் குறைந்தது.
பங்கு விலை உயரத் தொடங்கியதால் பல முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை வேகமாக விற்க ஆரம்பித்ததால் இந்த நிலை.
இன்று முற்பகல் 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 14,362.83 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 37.65 புள்ளிகள் குறைந்து 4523.45 புள்ளிகளாக நிப்டி இருந்தது.
பின்னர் மீண்டும் சென்செக்ஸ் உயரத் தொடங்கி வர்த்தக நேரத்தின் முடிவில் 151 புள்ளிகள் உயர்ந்தது.
Comments
Story first published: Wednesday, July 1, 2009, 18:36 [IST]