For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை இன்டர்வியூக்கு சென்ற பெண் கற்பழித்து கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்டர்வியூவுக்கு சென்ற பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆவடியை அடுத்த ஆரிக்கன்பேடு கிராமம் அருகே சாலையோரத்தில் இளம் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர் வியாசர்பாடி சர்மாநகரைச் சேர்ந்த சங்கரின் மகள் ராதா (19) என்று தெரிய வந்தது.
பிளஸ் 2 படித்துவிட்டு அதே பகுதியில் ஒரு டாக்டருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று எழும்பூரில் உள்ள ஒரு அலுவலகத்தில் இன்டர்வியூக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். இரவு 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சங்கர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந் நிலையில் தான் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில் அவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X