For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'திராவிட நாடும்' திமுகவின் பதவி சுகமும்-நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

Nedumaran
சென்னை: தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கையை திமுக குழி தோண்டி புதைத்தது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழத் தமிழர் பிரச்சனையில்ம் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாகத் தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக முதல்வர் கருணாநிதி கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். திராவிட நாடு கொள்கையை திமுக கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே, முதலில் கட்சிதான் வேண்டுமென்று முடிவெடுத்ததாக முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கருணாநிதி கூறியிருக்கிறார்.

பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை. பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழி தோண்டி புதைக்கப்பட்டது.

வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்துப் பேசுகிறார் கருணாநிதி என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X