கச்சா எண்ணெய் விலை குறைந்த்ல பெட்ரோல் விலையும் குறையும் - முரளி தியோரா
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மணலியிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் (விரைவில் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமையவிருப்பது) வரை விமான எரிபொருளுக்கான பைப் லைன் ஒன்றை அமைக்கிறது.
இதன் துவக்க விழாவும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட துவக்க விழாவும் நேற்று சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பிரபுல் படேல், முரளி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் முரளி தியோரா நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல் - டீஸல் விலை உயர்வுக்கு காரணம் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறியதுதான். ஆனால் நேற்றும் இன்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது உண்மையே. இதற்கேற்ப மீண்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படுமா என சிலர் கேட்கிறார்கள்.
எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவே இப்போதைய விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விலை குறைந்தால் நிச்சயம் ஏற்றிய விலையைக் குறைப்பதில் எந்தத் தடையும் இல்லை. விமான எரிபொருள் விலையை இப்போதைய நிலையில் குறைக்க முடியாது, என்றார் முரளி தியோரா.