884 டன் நிவாரணப் பொருட்களுடன் கொலராடோ கப்பல் இலங்கை கிளம்பியது
ஐரோப்பிய தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன் வணங்காமண் என்று பெயரிடப்பட்ட கேப்டன் அலி கப்பல் இலங்கை சென்றது.
ஆனால் அந்த நாடு நிவாரணப் பொருட்களை ஏற்காமல் திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை அருகே வந்து நின்ற வணங்காமண் கப்பலை சென்னைக்குள் அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் வந்தது. பின்னர் கப்பலில் இருந்த பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டன.
இந்கதப் பொருட்களை கேப் கொலராடோ கப்பலில் ஏற்றும் பணி நடந்து வந்தது.
இது முடிந்த நிலையில் 884 டன் நிவாரணப் பொருட்களுடன் கொலராடோ கப்பல் இன்று இலங்கை புறப்பட்டுச் சென்றது.
இன்று காலை கிளம்பிய இக்கப்பல் இன்று நள்ளிரவு வாக்கில் இலங்கை சென்றடையும். அதன் பின்னர் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.