For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டியை நிறுவியவர் கல்லறை கண்டுபிடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

John Sullivan grave
ஊட்டி: ஊட்டி நகரத்தின் நிறுவனரான ஜான் சுல்லிவனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி ஆவண மைய இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

1788ல் இங்கிலாந்தில் பிறந்த சுல்லிவன். 1804ல் கிழக்கு இந்திய நிறுவனத்தில் ஒரு சிறு எழுத்தாளராக பணியில் சேர்த்தார். தனது கடின உழைப்பால் 1815ல் கோயம்புத்தூர் கலெக்டராக பதவி உயர்வு பெற்றார்.

அங்கிருக்கும் நீர் வளத்தை பார்த்து அப்பகுதியில் மில் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என நினைத்தார். அவர் நீலகிரி மாவட்டத்தை இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை போல் பெரும் தொழில்நகரமாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டார்.

அதேபோல் ஊட்டி அருகே பெரிய ஏரி கட்டி, சேலம், ஈரோடு பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என நினைத்தார். தற்போது அது போல் பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. ஊட்டியை இந்தியாவின் முதல் மற்றும் நம்பர்-1 கோடை வாசஸ்தலமாக்கிய பெருமை ஜான் சுல்லிவனை தான் சேரும்.

அவர் 1855ல் இங்கிலாந்தில் மரணமடைந்தார். அவருடைய கல்லறையை நாங்கள் பல ஆண்டுகளாக தேடி வருகிறோம். தற்போது பிரிட்டிஷ் இந்தியா குறித்த அனைத்தும் புத்தகங்களாக வந்திருக்கும் நிலையில் அவருடைய கல்லறையை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

லண்டனின் அப்டன் நகரில் உள்ள செயின்ட் லாரன்ஸ் தேவாலயத்தில் இருக்கும் அந்த கல்லறையை வரும் 14ம் தேதி சென்று பார்க்கவிருக்கிறேன் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X