For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணிக் பார்ம் வந்த ராஜபக்சே மகன் மீது சேறு வீச்சு

By Staff
Google Oneindia Tamil News

Namal Rajapakse
வவுனியா: 3 லட்சம் தமிழர்களை கொத்தடிமைக் கைதிகள் போல அடைத்து வைத்திருக்கும் மாணிக் பார்ம் முகாமைப் பார்வையிட வந்த அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே மீது சேற்றை வாரி இறைத்தும், கல்வீசித் தாக்கியும் அசிங்கப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சனிக்கிழமை காலை மாணிக் பார்ம் அகதிகள் முகாமுக்கு பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் சகிதம் நமல் ராஜபக்சே வந்தார். அவர் ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார்.

அப்போது ராஜபக்சே மகன் மீது பொதுமக்கள் சேற்றை வாரியிறைத்துள்ளனர். கற்களும் சரமாரியாக வீசப்பட்டது.

இதனால் நமல் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் சமாளித்துக் கொண்டார். ஆனால், இந்த சம்பவங்களை படம் பிடித்த புகைப்படக்காரர்களிடமிருந்த கேமராக்களைப் பறித்து பிலிம் ரோல்களை வெளியில் எடுத்து விட்டார்.

இருப்பினும் சேறு வீசிய முகத்துடன் நமல் இருப்பது போன்ற படம் தமிழ்விண் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X