For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண் சாமியார் பிரஞ்யா தற்கொலை மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

Pragya
மும்பை: மலேகாவ்ன் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் சாமியார் பிரஞ்யா சிங் தாகூர் சிறையிலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ்ன் நகரில் குண்டுவெடிப்புகள் நடத்தி பலர் பலியாகக் காரணமாக இருந்த சாத்வி பிரஞ்யா கைது செய்யப்பட்டு பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையிலும், மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் தான் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாக பத்திரிக்கைகளுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், என் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் என்னை ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் போலீஸ் ஜீப்பில் கொண்டு சென்றனர். ஆனால், மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடத்திய அஜமல் கஸாபுக்கு விஐபி ட்ரீட்மெண்ட் தரப்படுகிறது.

நான் இந்துத்துவா போராளி என்பதால் என்னை அவமதிக்கிறார்கள். என்னை இந்த வழக்கில் பொய்யாக சேர்த்துள்ளனர். இதை கண்டித்து நான் சிறையிலேயே தற்கொலை செய்வேன். என்று கூறியுள்ளார்.

மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு வழக்கில் பிரஞ்யா சிங் தாகூர் மற்றும் ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X