For Daily Alerts
Just In
கிண்டி-வண்டலூர் பூங்காக்களில் 12 மண்ணுளி பாம்புகள் திருட்டு
கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணையில் பல வகையான பாம்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு மருத்துவ குணம் கொண்ட மண்ணுளி பாம்புகளும் உள்ளன. இதில் 9 பாம்புகளை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது.
மண்ணுளி பாம்பின் உடலிலிருந்து கிடைக்கும் திரவம் உயிர் காக்கும் விஷ முறிவு மருந்தாக பயன்படுவதும், இந்தப் பாம்புக்கு வெளிநாடுகளில் ரூ.1 கோடி வரை விலை கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சிறுவர் பூங்கா பாம்பு பண்ணையில் இருந்து மண்ணுளி பாம்புகள் திருபட்டப்பட்டுள்ளன. அதே போல வண்டலூர் பூங்காவிலும் 3 பாம்புகள் திருடப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பாம்பு பண்ணை ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸ் கருதுகின்றனர்.
Comments
Story first published: Monday, July 13, 2009, 16:43 [IST]