For Daily Alerts
Just In
பணவீக்கம் லேசாக உயர்ந்து -1.21 சதவீதமானது
டெல்லி: பணவீக்கம் லேசாக உயர்ந்து -1.21 சதவீதமாக உள்ளது.
பண வீக்கம் இப்போது மைனஸ் அளவில் உள்ளது. ஜூலை 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கத்தின் அளவு லேசாக உயர்ந்து -1.21 ஆக இருந்தது. அதற்கு முந்தைய வாரம் இது -1.55 சதவீதமாக இருந்தது.
எண்ணைப் பொருட்களின் விலை உயர்வே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசு சமீபத்தில் எரிபொருட்களின் விலையை உயர்த்தியது. இதையடுத்து நாப்தாவின் விலை 15 சதவீதமும், பர்னஸ் ஆயில் 11 சதவீதம், பெட்ரோல் 10 சதவீதம், ஹை ஸ்பீட் டீசல் 7 சதவீதம், சாதா டீசல் எண்ணை 4 சதவீதம் உயர்ந்துள்ளன.
இதன் காரணமாக பண வீக்கம் சற்று மேம்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, July 16, 2009, 15:58 [IST]