For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ல் இடைத் தேர்தல்

By Staff
Google Oneindia Tamil News

Electronic Voting Machine
சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.

தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன.

தொண்டாமுத்தூர் உறுப்பினர் கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டனர். பர்கூர் உறுப்பினர் தம்பித்துரை ராஜினாமா செய்து விட்டு எம்.பியாகி விட்டார். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ செல்வராஜ் சமீபத்தில் மரணமடைந்தார்.

இதையடுத்து இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

ஜூலை 22ம் தேதி இந்த ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வாக்குப் பதிவு ஆகஸ்ட் 18ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 22ம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X