முதல் நானோ 'ரிலீஸ்'-சாவியை வழங்கினார் டாடா
மும்பையில் தனது முதல் வாடிக்கையாளருக்கு இன்று நானோ கார் சாவியை வழங்குகினார் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா.
2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தத் திட்டம் பல்வேறு தடைகள் மற்றும் பிரச்சினைகளைச் சந்தித்து 6 ஆண்டுகள் தாமதமாக இன்றுதான் முழுமையடைகிறது.
இந்தத் திட்டத்தை மேற்கு வங்காளத்தின் சிங்கூரில் தொடங்க முடிவு செய்தார் டாடா. நானோ தொழிற்சாலையின் 75 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக அம் மாநிலத்திலிருந்து தனது கார் திட்டத்தை வாபஸ் பெற்ற ரத்தன் டாடா, குஜராத்தில் அதற்கான பணிகளை மேற்கொண்டார்.
இந்த நடைமுறைச் சிக்கல்களில் சிக்கி நானோ வெளிவருவது தடைபடக் கூடாது என விரும்பிய டாடா, உடனடியாக தங்களின் பந்த் நகர் ஆலையில் நானோவைத் தயாரிக்க உத்தரவிட்டார். இப்போது வெற்றிகரமாக 1.55 லட்சம் கார்கள் தயாராகிவிட்டன.
இந்தக் கார்களுக்கு மொத்தம் 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். இவர்களில் 1.55 லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி, கார்கள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு படிப்படியாக கார்களை டெலிவரி செய்வது இன்றுமுதல் துவங்கியது.
முதல் காரை தனது வாடிக்கையாளருக்கு ரத்தன் டாடாவே நேரில் வழங்கி விற்பனையைத் துவக்கி வைத்தார்.