நாகர்கோவில் ஆர்எஸ்எஸ் அலுவலத்துக்கு தீ-பொறுப்பாளருக்கு கத்திக் குத்து
நாகர்கோவில்: நாகர்கோவில் ஆர்எஸ்எஸ் அலுவலத்திற்கு தீ வைத்த வாலிபர்கள், அதன் பொறுப்பாளரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
நாகர்கோவில் செட்டிக்குளம் விநாயகர் கோவில் தெருவில் உள்ளது ஆர்.எஸ்.எஸ். குமரி மாவட்ட தலைமை அலுவலகம். இந்த அலுவலகத்தின் பொறுப்பாளராக முத்துக்குமார் என்பவர் உள்ளார்.
அவரும் கல்லூரி மாணவர்களான ராஜேஷ், நாகராஜன் ஆகியோரும் இந்த அலுவலகத்தி்ல் தங்கியிருந்தனர்.
இந் நிலையில் நேற்று மாலை நாகராஜன் மட்டும் அங்கிருந்தபோது 2 வாலிபர்கள் அங்கு வந்து முத்துக்குமார் எங்கே என்று கேட்டு நாகராஜனுடன் தகராறில் ஈடுபட்டனர்.
வாய்த்தகராறு முற்றவே நாகராஜனை கத்தியால் குத்தினர். பின்னர் அலுவலகத்துக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
தொடை மற்றும் கையில் கத்திக் குத்து விழுந்த நாகராஜனுக்கு வலிப்பு ஏற்பட்டது. வாலிபர்கள் வைத்த தீயில் அங்கிருந்த ஆவணங்கள், தொண்டர்களுக்கான உடைகள் எரிந்து நாசமாயின.
அப்போது அலுவலகத்துக்கு வந்த ராகேஷ் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பொது மக்கள் ஓடிவந்து நாகராஜனை மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தை டி.ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகி்றனர். அந்த அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.