For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேஷியா-2 ஹோட்டல்களில் குண்டு வெடித்து 9 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவில் இன்று இரு நட்சத்திர ஹோட்டல்கள் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் நியூசிலாந்தைச் சேர்ந்ச சுற்றுலாப் பயணிகள் உள்பட 9 பேர் பலியாயினர். மேலும் 13 வெளிநாட்டவர் உள்பட 50க்கும் மேற்ப்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜகார்தாவின் மிகப் பிரபலமான ரிட்ஸ்-கார்ல்டன், மேரியட் ஆகிய ஹோட்டல்களில் இன்று இந்த குண்டுகள் வெடித்தன. இரண்டுமே அருகருகே அமைந்துள்ள ஹோட்டல்களாகும்.

முதலில் மேரியட் ஹோட்டலிலும் அடுத்த 5 நிமிடத்தில் ரிட்ஸ் ஹோட்டலிலும் இந்த குண்டுகள் வெடித்தன. மேரியட் ஹோட்டல் மீது 2003ம் ஆண்டிலும் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு ஹோட்டல்களிலும் பெரும்பாலும் வெளிநாட்டினரே தங்குவது வழக்கம். எனவே அவர்களைக் குறி வைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜெமா இஸ்லாமிய என்ற தீவிரவாத அமைப்பு தான் இத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 2002ல் இந்தேனேஷியாவின் பாலி தீவில் இந்த அமைப்பு நடத்திய பயங்கர மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 88 ஆஸ்திரேலியர்கள் உள்பட 200க்கும் மேப்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான வீடியோ:

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X