அலயன்ஸ் என்றாலே நினைவுக்கு வருவது திமுக -காங்.தான் - கருணாநிதி
கன்னடத்தில் வீரப்ப மொய்லி ராமாயணம் குறித்த எழுதிய நூல், ராமாயணம் பெரும் தேடல்கள் என்ற தலைப்பில் தமிழில் எழுதப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
நூலை வெளியி்ட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி, நான் இந்த நூலை வெளியிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
பெரியாரின் கருத்துக்களை இதயத்திலேயே பதியவைத்து ராமாயணத்தை விமர்சித்து வந்திருக்கிறேன். இன்று வரை விமர்சித்து வருகிறேன், இனியும் விமர்சிப்பேன்.
இந்த விழாவுக்கு வீரப்ப மொய்லி தன்னை எப்படி அழைத்தார் என்பது தான் ஆச்சரியம். எனக்கும் மொய்லிக்கும் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக அலையன்ஸ் இருந்து வருகிறது. அதனால் தான் இந்த அலையன்ஸ் பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்கிறோம்.
அலையன்ஸ் என்றாலே இப்போது எல்லோருடைய நினைவுக்கும் வருவது, காங்கிரஸ்-திமுக அலையன்ஸ்தான். தேடல்கள் என்றாலே கண்டுபிடிக்க முடியாமல் புதைந்து கிடப்பதை ஆய்வு செய்வதுதான்.
பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்று இந்நூலில் மொய்லி எழுதியிருப்பது பாராட்டுக்குரியது என்றார் கருணாநிதி.