For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.நா. தூதரை வாபஸ் பெற்ற இலங்கை

By Staff
Google Oneindia Tamil News

Dayan Jayatilake
கொழும்பு: ஐ.நா.வுக்கான தனது நிரந்தர பிரதிநிதி தயான் ஜெயதிலகேவை இலங்கை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இன்னும் 10 மாத காலம் அவரது பதவிக்காலம் உள்ள நிலையில் எந்தக் காரணத்தையும் கூறாமல் அவரை திரும்பப் பெற்றுள்ளது இலங்கை அரசு.

ஆனால் காஸா பகுதியில், இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமித்ததை எதிர்த்து கருத்து தெரிவித்ததும், இலங்கை மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வை எதிர்ப்போருக்கு எதிராக நடந்து கொண்டதாலுமே இந்த நீக்கம் எனக் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐ.நா. அரங்கில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டவர் ஜெயதிலகே. மேலும், இந்தியாவுடன் நெருங்கிய உறவு கொள்ள வேண்டும் எனவும், 13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இலங்கையின் பிரபல கல்வியாளரான ஜெயதிலகே, 1987ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் அமைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண அரசின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர்.

இந்த நிலையில் ஜெயதிலகேவை பதவியை விட்டு தூக்கியுள்ளது இலங்கை அரசு. இது இலங்கை அரசு குறித்த பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X