சத்யம்... கைநழுவிய ரூ.100 கோடி ரயில்வே கான்ட்ராக்ட்
பெங்களூர்: இந்திய ரயில்வேயின் ரூ.100 கோடி லோகோமோடிவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் காண்ட்ராக்ட் சத்யம் நிறுவனத்தின் கை நழுநழுவிப் போய்விட்டது.
கடந்த ஜனவரியில் சத்யம் நிறுவனத்துக்கு இந்த காண்டிராக்டை வழங்கியது ரயில்வே. ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் ரயில்வே எதிர்பார்த்த நிதி விவரங்களை சத்யம் நிறுவனம் அளிக்கத் தவறியதால் இந்த 100 கோடி ரூபாய் காண்டிராக்ட்டை ரத்து செய்துள்ளது ரயில்வே.
இப்போது இந்த ஒப்பந்ததைப் பெற விப்ரோ உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே நிர்வாகம் இதுபோல மேலும் பல காண்ட்ராக்ட்களைத் தரவுள்ளது. மொத்தம் ரூ.2000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தங்களைப் பெற கடும் போட்டி நிலவுகிறது இன்போஸிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களுக்குள்.
இப்போதைய ஒப்பந்தத்திலிருந்து விலக்கப்பட்டதன் மூலம், இனி வரும் ரயில்வே ஒப்பந்தங்களைப் பெறுவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது சத்யம் நிறுவனத்துக்கு.