For Daily Alerts
Just In
சென்னை கடலோரத்தில் டால்பின்கள்.. கிரகண எபெக்ட்?
இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையி்ல் ஜாகிங் சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கடற்கரைக்கு மிக அருகே டால்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
இதை நம்ப முடியாத பலரும் கடலுக்கு மிக அருகே சென்று பார்த்தபோது அது டால்பின்கள் தான் என்பது உறுதியானது.
இதையடுத்து உடனடியாக தகவல் பரவவே ஆயிரக்கணக்கானவர்கள் மெரீனாவில் கூடிவிட்டனர் டால்பின்களைக் காண.
சூரிய கிரகணத்தால் கடலில் ஏற்பட்ட மாற்றங்களால் தான் டால்பின்கள் வழக்கத்துக்கு மாறாக சென்னை கடலோரப் பகுதிக்கு வந்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.
Comments
Story first published: Wednesday, July 22, 2009, 15:30 [IST]