For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகாமில் காணாமல் போன பிரபாகரனின் பெற்றோர்!!!

By Staff
Google Oneindia Tamil News

Prabhakaran with Family
வன்னி: வவுனியாவின் மானிக் பார்ம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் தந்தை வேலுப் பிள்ளை மற்றும் தாயார் பார்வதி அம்மாள் ஆகியோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இருவரும் வேறு இடத்திற்கு ரகசியமாக மாற்றப்பட்டிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவின்போது, மக்களுடன் மக்களாக பிரபாகரனின் பெற்றோரும் அகதிகளாக வந்தனர். அவர்களை அடையாளம் கண்ட ராணுவம், அவர்களை மானிக் பார்ம் முகாமில் தனியாக அடைத்து வைத்தது.

இவர்கள் இங்கு வந்து தங்கியிருப்பதை அதிபர் ராஜபக்சேவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பிரபாகரனின் பெற்றோரை முகாமில் பார்க்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X