For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 பெண்கள் கற்பழித்து கொலை: 'சைகோ' கைது

By Staff
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: கடந்த 3 மாதங்களில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் அடுத்தடுத்து 8 பெண்களை கற்பழித்து, கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.

புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கிராமப் பகுதிகளில் தனியே வயலுக்குச் சென்ற 8 பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதையெல்லாம் ஒரே நபரே செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

இந் நிலையில் கடந்த 10ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள ஆயிப்பட்டியில் வயலு்க்குச் சென்ற மகேஸ்வரி என்ற பெண்ணை கழுத்தை நெரிக்க முயன்றான் ஒருவன்.

அவரது சத்தம் கேட்டு பக்கத்துக்கு வயல்களில் இருந்து மக்கள் ஓடி வந்ததால் அவன் தப்பியோடிவிட்டான். ஆனால், அவன் வந்த டிவிஎஸ் 50 சிக்கியது.

இதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையம்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி (36) என்பவன் பிடிபட்டான்.

இவனிடம் விசாரணை நடத்தியதில் 8 பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். இவனிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவன் கிட்டத்தட்ட சைகோ கொலைகாரனாகவே மாறிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X