For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரிஸ்ஸா மடத்தின் ரூ.6 கோடி நிலம் சுருட்டல்!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மணிமங்கலத்தில் உள்ள ஒரு மடத்துக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை மோசடியாக விற்ற மடத்தின் மேலாளர் மற்றும் பெண் கைது செய்யப்பட்டனர்.

ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் மகந்த் பசந்த் தாஸ் பாவாஜி (87) காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள உதாசீன் பாவாஜி மடத்தின் தலைவராக உள்ளார்.

இவருக்கு ஒரியா, இந்தி மொழிகள் மட்டுமே பேசவும் எழுதவும் தெரியும். மற்ற மொழிகள் தெரியாது.

இந்த மடத்துக்கு காஞ்சிபுரம், மணிமங்கலம், ராணிப்பேட்டை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், திருப்பதி ஆகிய இடங்களில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

செல்வராஜ் (50) என்பவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் மடத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார். மடத்தின் சொத்துகளை சுருட்ட திட்டமிட்ட இவர், முதலில் பாவாஜியிடம் சொத்துகள் தொடர்பாக, ஏமாற்றி 'பவர் ஆப் அட்டர்னி' வாங்கிக் கொண்டுள்ளார்.

இதில் மணிமங்கலத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சிராணிக்கு (48) மாற்றித் தந்தார் செல்வராஜ்.

ஜான்சிராணி அந்த நிலத்தை வேறு சிலருக்கு விற்றுவிட்டார். இந்த மோசடி குறித்து அறிந்த மடத்தின் சில பக்தர்கள் வழக்கறிஞர் மூலம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜ்), ஜான்சிராணியை கைத செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X