அமைச்சரவை கூட்டம்-பிரதமருக்கு மம்தா தந்த அதிர்ச்சி
நேற்று முன் தினம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நிலங்களை கையப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு அறிக்கையை பிரதமர் முன் வைத்தார்.
அதில், பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியார் நிறுவனங்கள் 70 சதவீத நிலத்தை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம், மிச்சமுள்ள 30 சதவீதத்தை மாநில அரசுகள் கையப்படுத்தித் தரும் என்று கூறப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தவுடன் டென்சனான மம்தா பானர்ஜி, எப்படி இப்படி ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரலாம். இது குறித்து ஏன் என்னிடம் முதலிலேயே விவாதிக்கவில்லை. இந்த சட்டத் திருத்தத்துக்கு நான் ஆதரவு தர முடியாது.
இதைத் தானே மேற்குவங்க மாநிலம் நந்திகிராமல் இடதுசாரி அரசு செய்ய முயன்றது. அதை எதிர்த்துத் தானே நான் பெரும் போராட்டம் நடத்தினேன்.
ஆனால் அதே தவறை செய்யும் நீங்கள் உங்கள் தவறுக்கெல்லாம் என்னையும் ஒரு அங்கமாக்க முயல்கிறீர்களா?. இந்தத் தவறைச் செய்ய நான் தயாராக இல்லை என்று கத்திவிட்டு வெளியேறினார்.
இதைப் பார்த்து பிரதமர், அமைச்சர்கள் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க பின்னாடியே ஓடியுள்ளார் பிரணாப் முகர்ஜி. இந்த சட்டத் திருத்தம் குறித்து இன்று பேசமாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு கெஞ்சிக் கூத்தாடினார்.
இதையடுத்தே மம்தா பானர்ஜி அமைச்சரவைக் கூட்டத்துக்குத் திரும்பி வந்துள்ளார். இதனால் 45 நிமிடங்கள் அமைச்சரவைக் கூட்டம் ஸ்தம்பித்துப் போனது.
மம்தாவின் எதி்ர்பபையடுத்து இந்த திருத்தம் குறித்து நிலைக் குழு ஆராயும் என்று அறிவித்த பிரதமர் மன்மோகன் சி்ங் அந்த சட்டத் திருத்த பைலைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டார்.
ஆனாலும் கோபம் தணியாத மம்தா நேற்று மக்களவைக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டார்.
மம்தாவி்ன் இந்தச் செயல் பிரதமருக்கு, இடதுசாரிகளை நினைவூட்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.