For Quick Alerts
For Daily Alerts
Just In
சிவகாசியில் மீண்டும் பட்டாசு விபத்து - ஒருவர் பலி
சிவகாசி: சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்து வந்தவர் திடீரென பட்டாசுகள் வெடித்ததில் உடல் கருகி பலியானார்.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் என்ற இடத்தில் பூமிநாதன் என்பவர் தனது வீட்டில் ரகசியமாக பட்டாசுகள் தயாரித்து வந்தார்.
தீபாவளிக்கான பட்டாசுகள் தயாரிப்பில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் சிக்கி பூமிநாதன் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவரது வீடும் சேதமடைந்தது. சமீபத்தில்தான் சிவகாசி அருகே நடந்த பயங்கர பட்டாசு விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அனுமதியின்றி வீட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Sunday, July 26, 2009, 13:06 [IST]