For Daily Alerts
Just In
அதிபர் தேர்தல்-இப்போதே தயாராகும் சாரா பாலின்
துணை அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி் சார்பில் போட்டியிட்டவர் சாரா பாலின். தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது.
அலாஸ்கா மாநில ஆளுநராகவும் இருந்து வந்த சாரா பாலின், அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்காக தயாராகும் வகையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அவர் அறிவித்தார்.
அதன்படி தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கு.
சாரா பாலினுக்கு ஆளுநர் மாளிகையில் வழியனுப்பு விழா நடந்தது. அதில் பேசிய பாலின், தொடர்ந்து அலாஸ்கா மக்களுக்காகப் பாடுபடுவேன் என்றார் பாலின்.
Comments
Story first published: Tuesday, July 28, 2009, 17:27 [IST]