For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஓசி லாபம் 9 மடங்கு அதிகரிப்பு-பிபிசிஎல் ரூ.614 கோடி லாபம்!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டிலேயே பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஐஓசியின் லாபம் ரூ.415.13 கோடியாக இருந்தது. ஆனால் இந்த காலாண்டில் ரூ.3,682.83 ஆக நிகர லாபம் அதிகரித்துள்ளது.

அதே நேரம், மொத்த விற்பனை அளவு ரூ.89,148 கோடியிலிருந்து ரூ.60683 கோடியாகக் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் 2009-ல் ஐஓசி நிறுவனம் போங்கைகான் ரிபைனரி மற்றும் பெட்ரோகெமிகல்ஸ் நிறுவனத்தை இணைத்துக் கொண்டது ஐஓசி. இதனால் கடந்த நிதியாண்டின் நிதி நிலை விபரங்கள் ஆய்வில் உள்ளன.

பாரத் பெட்ரோலியம் ரூ.614 கோடி லாபம்!

அரசுத் துறைக்குச் சொந்தமான மற்றொரு பெட்ரோலிய நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) இந்த காலாண்டில் ரூ.614 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நிறுவனம் ரூ.1067 நஷ்டத்தைச் சந்தித்தது நினைவிருக்கலாம்.

கச்சா எண்ணெய் விலை குறைந்ததும், பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்து விற்கப்பட்டதுமே இந்த லாபத்துக்குக் காரணம் என பிபிசிஎல் நிறுவனத்தின் நிதி இயக்குநர் எஸ்கே ஜோஷி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து அதிக விலையிலேயே பெட்ரோல் விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X