For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளியுறவு செயலாளராக நிரூபமா ராவ் பொறுப்பேற்பு

By Staff
Google Oneindia Tamil News

Nirupama Rao
டெல்லி: புதிய வெளியுறவுத்துறைச் செயலாளராக நிருபமா ராவ் (58) இன்று பதவியேற்றுக் கொண்டார்.

வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த சிவசங்கர் மேனன் வெள்ளிக்கிழமை பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து நிருபமா ராவ் இன்று பதவியேற்றார்.

இந்த பதவியில் நிருபமா 17 மாதங்கள் நீடிப்பார். வெளியுறவுச் செயலாளர் பதவியை வகிக்கப் போகும் இரண்டாவது பெண் நிருபமா ஆவார்.

இதற்கு முன் சோகிலா ஐயர் இந்த பதவியை வகித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர்...

நிரூபமா கேரளாவைச் சேர்ந்தவர். இவரும் மேனன் வகுப்பைச் சேர்ந்தவர்தான். இவரது கணவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அவர் கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார்.

நிரூபமா, வெளியுறவுத்துறையில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இலங்கை, சீனாவுக்கான இந்தியத் தூதராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

ஓய்வு பெற்றுள்ள சிவசங்கர மேனன் மிகச் சர்ச்சைக்குரிய வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தார். அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம், இலங்கை விவகாரம், பாகிஸ்தான் விவகராத்தில் இவரது தலைமையிலான வெளியுறவுத்துறையி்ன் செயல்பாடு மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இலங்கை இனப்படுகொலையில் இவரும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான இவரது ஊரைச் சேர்ந்த எம்.கே.நாராயணனும் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பியதாக கடுமையான புகார் உள்ளது நினைவுகூறத்தக்கது.

பாதுகாப்புத் துறைக்கு புதிய செயலாளர்:

அதே போல பாதுகாப்புத் துறையின் புதிய செயலாளராக பிரதீப் குமார் நேற்று பொறுப்பேற்றார். தற்போதைய செயலாளர் விஜய் சிங் நேற்று ஓய்வுபெற்றார்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். கேடர் அதிகாரியான பிரீதீப், மத்திய அரசிலும் ஹரியாணா மாநில அரசிலும் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X