For Daily Alerts
Just In
வனக்காவலர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - நக்சலைட்டுகள் என சந்தேகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டுப் பகுதியில் ரோந்து சென்ற வனக்காவலர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பினர். அவர்கள் நக்சலைட்டுகளாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் நாரலப்பள்ளி என்ற காட்டுப்பகுதி உள்ளது. அங்கு வனக்காவலர் கோவிந்தன் என்பவர் ரோந்து போய்க் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குறுக்கிட்ட ஒரு கும்பல் கோவிந்தனை சரமாரியாக சுட்டு விட்டுத் தப்பிச் சென்றது.
இதில் கோவிந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவிந்தனை சுட்டவர்கள் நக்சலைட்டுகளா அல்லது மரம் திருடும் கும்பலா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Sunday, August 2, 2009, 12:18 [IST]