For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலை அதிமுக புறக்கணித்தது தவறு-வாசன்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. தோல்வி பயத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர்
என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கருத்து தெரிவி்த்துள்ளார்.

மதுரை வந்த ஜி.கே.வாசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஐந்து தொகுதி இடைத் தேர்தலிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். கடந்த, லோக்சபா தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளுக்கு
மக்கள் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் அதை விட சிறப்பான வெற்றியை அளிப்பார்கள்.

அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. தோல்வி பயத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர்கள் பிரசாரம் செய்வது தவறு என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X