For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை, கொள்ளையில் ஈடுபட்ட வி.சி. பிரமுகர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கரூர்: கரூர் அருகே தொடர் கொலை, கொள்ள சம்பவங்களில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் தெரசா ஸ்கூல் ரவுண்டானா அருகில் சிவசக்தி நகரை சேர்ந்த மகேஷ்குமார் என்பவரிடம் இரண்டு பேர் கத்தியை காட்டி அவரது வாட்ச், செல்போன் மற்றும் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். இது குறித்து மகேஷ்குமார், பசுபதிபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஏ.டி.எஸ்.பி. அண்ணாதுரை தலைமையில் டி.எஸ்.பி. இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் மோகன்தாஸ், கண்ணையன் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை விசாரணையை துவக்கியது.

விசாரணையில் இந்த சம்பவத்துக்கு வாங்கல் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த முருகேசன் என்கிற முகிலன்(39) என்பவர் தான் காரணம் என்பது தெரியவந்தது.

போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட முருகேசன், நன்னியூர் விஏஓ காமராஜிடம் சரணடைந்து குற்றம் குறித்து ஒப்புதல் அளித்தார். இதையடுத்து தனிப்படை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் முருகேசனை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பேரில் அவரது கூட்டாள் வாங்கலை சேர்ந்த இளையராஜா (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும், இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து பல்வேறு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி கருணாநிதி முன் ஆஜர் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளிவான முருகேசன், கரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கரனுடைய கார் டிரைவர் என்பது தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X