திமுகவில் இணையும் காஞ்சி அதிமுக நகராட்சி தலைவர்
காஞ்சீபுரம்: காஞ்சிபுரம் அதிமுக நகராட்சி தலைவர் வி.ராஜேந்திரன் அதிமுகவிலிருந்து விலகி நாளை துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய இருக்கிறார்.
சமீபத்தில் காஞ்சிபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் 6 பேர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் அதிமுக நகராட்சி தலைவராக பதவி வகிந்து வரும் வி.ராஜேந்திரன் நகராட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்டார்.
இதையடுத்து அங்கு சமீபகாலமாக நகராட்சி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கவுன்சிலர்களை தொடர்ந்து ராஜேந்திரனும் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
அவர் நாளை (14.08.2009) பர்கூர் தொகுதிக்கு பிரசாரம் செய்ய வரும் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் என கூறப்படுகிறது. இதை காஞ்சிபுரம் திமுக நகர செயலாளர் சேகர் உறுதி செய்துள்ளார்.
திமுகவில் இணையவிருக்கும் ராஜேந்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் அதிமுக நகர செயலாளராக இருந்து வருகிறார்.