For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதுமலை-யானை மிதித்து வெளிநாட்டு பெண் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி: முதுமலை காட்டுப் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜி்ல் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் யானை மிதித்து பலியானார்.

வோக்காபுரம் என்ற இடத்தில் உள்ள வன விடுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 60 வயது பெண் தனது மகனுடன் தங்கியிருந்தார்.

இருவரும் விடுதியின் பின் புறம் உள்ள வனப் பகுதியில் நடந்து சென்றபோது ஒரு காட்டு யானை இருவரையும் தாக்கியது. இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காயமடைந்த அவரது மகன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் அனுமதியி்ன்றி சரணாலப் பகுதிக்குள் நுழைந்ததால் இந்த சம்பவம் நடந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குட்டி யானை அட்டகாசம்:

இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள கிராமங்கள், எஸ்டேட்டுகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

கடந்த மாதம் 7 காட்டு யானைகள் கும்பலாக ஊருக்குள் புகுந்து பெரும் சேதம் விளைவித்தன. அவற்றை பொதுமக்களும் வனத்துறையினரும் விரட்டினர். இதில் பெரிய யானைகள் காட்டுக்குள் சென்றுவிட்ட நிலையில் ஒரு குட்டி யானை மட்டும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது.

நேற்று முன்தினம் இந்த யானை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வன ஊழியர் ஒருவரை தாக்கியது. மேலும் இரவு நேரங்களில் வீடுகளின் கதவுகளையும் தாக்கி உடைத்து வந்தது.

இதையடுத்து மயக்க மருந்து செலுத்தப்பட்டு நேற்றிரவு இந்த யானை மடக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X