For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெசன்ட் நகர்-ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடல் பகுதியில் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டு கல்லூரி மாணவர் பலியானார். மேலும் 2 மாணவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பூரைச் சேர்ந்த சத்யபிரபு (21), அனுப் டேனியல் (19), ஜெய்கணேஷ் (21) மூவரும் பி.இ. 3ம் ஆண்டு மாணவர்கள்.

இன்று அதிகாலை 5 மணியளவில் மூவரும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு காரில் சென்றனர். சாஸ்திரி நகர் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மூன்று பேரையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது.

உயிருக்கு போராடிய இவர்களை அப் பகுதி மீனவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், சத்யபிரபு மூச்சுத் திணறி உயிரிழந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X