For Daily Alerts
Just In
தேர்தல் பணி: ஒத்துழைக்காத கிருஷ்ணகிரி எஸ்.பி. அதிரடி மாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இன்று இடைத் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் தேர்தல் பணிகளுக்கு மாவட்ட எஸ்.பி. பாபு சரிவர ஒத்துழைக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் போனது.
இதையடுத்து பாபுவை உடனடியாக மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவரை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை தற்போது தர்மபுரி எஸ்.பி.யே கிருஷ்ணகிரி எஸ்.பி. பணியை கூடுதலாக பார்ப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Comments
தமிழ்நாடு கிருஷ்ணகிரி sp தேர்தல் ஆணையம் மாற்றம் எஸ்பி tamilnadu shifted சட்டசபை இடைத் தேர்தல் assembly by election
Story first published: Tuesday, August 18, 2009, 16:47 [IST]