நில அபகரிப்பு- மாஜி திமுக அமைச்சர் ராஜா மீது குற்றப்பத்திரிகை
ஈரோடு: நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் திமுக அமைச்சர் என்கேகேபி ராஜா மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர் என்கேகேபி ராஜா. கடந்த ஆண்டு அவர் மீது போலீசில் நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதை போலீசார் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதி, இந்த வழக்கில் என்கேகேபி ராஜா அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மாதம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் சுமார் 30 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் கடந்த 11ம் தேதி பெருந்துறை ஜூடிசியல் நீதிபதி முன்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் என்கேகேபி ராஜாவை 14வது எதிரியாக சேர்ந்துள்ளனர். இவரை தவிர்த்து திமுக மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், பெருந்துறை வட்டார செயலாளர் கே.பி.சாமி, நகர செயலாளர் கோபிநாத் ஆகியோரும் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை நடத்தப்பட்ட 30 பேரில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வழங்கியுள்ளது.