For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்சலைட் சுந்தரமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்

By Staff
Google Oneindia Tamil News

பெரியகுளம்: பெரியகுளம் நீதிமன்றத்தில் நக்சல் தலைவர் சுந்தரமூர்த்தியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே முருகமலை வனப்பகுதிகளில் கடந்த 2007 ஜூன் 26 ம் தேதி நக்சலைட் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் வேல்முருகன், பழனிவேல், முத்துசெல்வம், விவேக், காளிதாஸ், நவீன்பிரசாத், சேகர், கார்த்தி, ஈஸ்வரன், பாலன் ஆகியோர் ரகசியமாக ஆயுதப்பயிற்சி மேற்கொண்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் சுந்தரமூர்த்தி, ஈஸ்வரன், பாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான
சுந்தரமூர்த்தி தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அவர் பலத்த போலீஸ் பாதுகப்புடன் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் இந்த வழக்கில் ஜாமீனில் வெளி வந்துள்ள ஈஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோரும் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரஜினி விசாரணையை வரும் செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார். நக்சலைட்கள் ஆஜராவதை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X