வங்கியில் கொள்ளை முயற்சி-ரூ. 2.5 கோடி தப்பியது
நெல்லை: நெல்லை அருகே கூட்டுறவு வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பல் ஒன்று லாக்கர் உடைக்க முடியாததால் முயற்சியை கைவிட்டு தப்பியோடியது. லாக்கரில் இருந்த ரூ. 2.5 கோடி தப்பியது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியில் குட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி உள்ளது. இங்கு விவசாய கடன் உள்ளி்ட்ட பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் மேலாளராக இருக்கும் சுந்தர்சிங் என்பவர் நேற்று வழக்கம் போல் வங்கியை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை வங்கி திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு வங்கியின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் வங்கி லாக்கரை பார்க்க விரைந்து சென்றார். அப்போது லாக்கர் பலத்த சேதமடைந்திருந்தது. ஆனால் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஏதோ ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயற்சித்திருக்கலாம் என்பதை உணர்ந்த மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அந்த மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
மர்ம கும்பல் ஒன்று கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. ஆனால், அவர்கள் நீண்டு முயற்சி செய்தம் லாக்கர் திறக்கவில்லை என்பதால் முயற்சியை கைவிட்டு ஒட்டம் பிடித்துள்ளனர். லாக்கரில் இருந்த ரூ. 2.5 கோடி, நகை ஆகியவை பத்திரமாக இருக்கின்றன என்றார்.